Isravelin Thuthikul Vaasam Pannum - இஸ்ரவேலின் துதிக்குள்


இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனே 
இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே 
இறங்கி வந்திடுமே 

உம்  வாசல்களில் துதியோடும் 
உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும் 
உம்மை துதித்திடவே பிரவேசித்திட்டோம் 
உம் நாமத்தை ஒருமித்துமே 
உயர்த்தியே போற்றுகிறோம் 

இஸ்ரவேலின் எக்காளம் மகா 
ஆரவாரத்து முழக்கத்தின் முன் 
எரிகோவின் அலங்கம் விழுந்தது போல் 
இப்போ சத்துருவின் கோட்டைகளை 
இடித்து தகர்த்திடுவோம் 

எதை குறித்தும் கவலைப்படாமல் 
எல்லா விண்ணப்பமும்  ஏறெடுங்கள் 
என்ரீர், ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு 
இபோதெல்லா புத்திக்கும் மேலான 
உம் சமாதானம் ஈந்திடுமே 

ஆசாரியர் லேவியர் ஒருமித்துமை 
ஏக சத்தமாய் துதித்து பாடவே 
ஆலயம் மகிமையால் நிரம்பினது போல் 
ஆலயமாம் எம்மை புவி காண 
உம் மகிமையால் நிரப்பிடுமே 

உம் கிருபையின் மகிமைக்குமே 
எம்மை புகழ்ச்சியாய் முன் குரித்தீர் 
எம் சுதந்தரத்தின் அச்சாரமாக 
எம்மை மீட்கவே முத்தரித்தீரே 
உம் ஆவியானவரால்  

No comments:

Post a Comment