Ennaalume Thuthipen - எந்நாளுமே துதிப்பேன்
எந்நாளுமே துதிப்பேன் என் நேசர் இயேசுவை
காலையும், மாலையும் மற்றெல்லா வேலையும்
கையையும் நெஞ்சையும் மேலே உயர்த்தி நான்
பாவங்கள் நீக்கி விட்டார் - தம் இரத்தத்தை சிந்தி
காணாமல் போயினேன், கண்டுபிடித்தனர்
தூக்கி சுமந்து தம் மந்தையில் சேர்த்தனர்
அன்பின் சொரூபி அவர் - தம் அன்பை காட்டினார்
மாட்டு தொழு முதல் தூக்குமரம் வரை
ஈன கோலம் பூண்டு நிந்தையும் சகித்தார்
சாவின் நிழல் அதிலும் - பிசாசினால் வரும்
நானே உன் பரிகாரி, விலக்குவேன் வியாதியை
நோக்கிப்பார் என்னை நீ, இரட்சிப்பேன் என்றதால்
அளிக்கிறார் நன்மை எல்லாம் - ஒவ்வொரு நாளிலும்
ஊணும் உடையையும் வேண்டும் பொருள் எல்லாம்
குறைவின்றி நிறைவாக தந்திடுவதால் நான்
பரிசுத்த ஜீவியத்தை - இபார்த்தலத்திலே
தேவ பயத்தோடு ஊக்கமாய் செய்யவே
ஆவியின் ஈவையும் எமக்களித்ததால்
வந்திடுவாரே அவர் - வெகு சீக்கிரமாக
காண்பேன் அவரை நான், சேர்வேன் அவரிடம்
அல்லேலூயா பாடி பாடி போற்றியே
வாழுவேன் என்றைக்குமே - என் நேசர் பக்கத்தில்
புதிய எருசலேம் என் சுய தேசமாம்
வானவருடன் நான் ஆனந்தம் கொள்ளுவேன்
No comments:
Post a Comment