Ennaalume Thuthipen - எந்நாளுமே துதிப்பேன்


Ennaalume Thuthipen - எந்நாளுமே துதிப்பேன்

எந்நாளுமே துதிப்பேன் என் நேசர் இயேசுவை 

காலையும், மாலையும் மற்றெல்லா வேலையும் 
கையையும் நெஞ்சையும் மேலே உயர்த்தி நான் 

பாவங்கள் நீக்கி விட்டார் - தம் இரத்தத்தை சிந்தி 
காணாமல் போயினேன், கண்டுபிடித்தனர் 
தூக்கி சுமந்து தம் மந்தையில் சேர்த்தனர் 

அன்பின் சொரூபி அவர் -  தம் அன்பை காட்டினார் 
மாட்டு தொழு முதல் தூக்குமரம் வரை 
ஈன கோலம் பூண்டு நிந்தையும் சகித்தார் 

சாவின் நிழல் அதிலும் - பிசாசினால் வரும் 
நானே உன் பரிகாரி, விலக்குவேன் வியாதியை 
நோக்கிப்பார் என்னை நீ, இரட்சிப்பேன் என்றதால் 

அளிக்கிறார் நன்மை எல்லாம் - ஒவ்வொரு நாளிலும் 
ஊணும் உடையையும் வேண்டும் பொருள் எல்லாம் 
குறைவின்றி நிறைவாக தந்திடுவதால் நான் 

பரிசுத்த ஜீவியத்தை - இபார்த்தலத்திலே 
தேவ பயத்தோடு ஊக்கமாய் செய்யவே 
ஆவியின் ஈவையும் எமக்களித்ததால் 

வந்திடுவாரே அவர் - வெகு சீக்கிரமாக 
காண்பேன் அவரை நான், சேர்வேன் அவரிடம் 
அல்லேலூயா பாடி பாடி போற்றியே 

வாழுவேன் என்றைக்குமே - என் நேசர் பக்கத்தில் 
புதிய எருசலேம் என் சுய தேசமாம் 
வானவருடன் நான் ஆனந்தம் கொள்ளுவேன் 

No comments:

Post a Comment