En Mellulla - என் மேலுள்ள நின் சர்வ நன்மைகட்காக
என் மேலுள்ள நின் சர்வ நன்மைகட்காக நான்
என்ன செய்வேன் உமக்கென் இயேசுபரா ? - இப்போ
நன்றியால் எந்தன் உள்ளம் பொங்கி வழியுதே
இன்று வரையும் என்னை காத்ததாலே - தேவா
பாவத்தினின்று எந்தன் ஆவி உயிர்ப்பிக்க
சாப சிட்சை சகித்த தேவ சுதா - மகா
என்னை அனுதினம் அன்போடு நடத்திடும்
பொன் இயேசுவே ! அனந்தம் ஸ்தோத்திரமே ! - எந்தன்
முற்றுமுடிய என்னை காத்து நடத்திட
சத்துவம் ஈந்திடும் நல் நண்பன் நீரே - திரு
தாதன் வலப்புறத்தில் நாதன் நீர் ஏழைக்காய்
பாதம் வேண்டியே நிற்கும் பாக்கியனே - பொன்னின்
குற்றம் குறைகள் இன்றி கோதில்லா ஜோதியில்
முற்றும் என்னை நிறுத்த வல்லவரே - தேவா
இந்நிலன் தன்னில் ஏழை தங்கிடும் நாளெல்லாம்
ஏத்துவேனே உம் திரு நாமமதை - ஏழை
No comments:
Post a Comment